Loading . . .




சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் : அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் ஆய்வு

The Forecast 2 years ago சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் மற்றும் அரசு அதிகாரிகள்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ இ. ஆ. ப., முன்னிலையில், மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள வாரிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்றது.

அப்போது, கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள், அபாயகரக் கழிவுகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். கேரளத்துக்கு செல்லும் வாகனங்களிலும் ஜி. பி. எஸ். டிராக்கிங் சிஸ்டம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார்.

0 Comments

Post your comment here

சுற்றுச்சூழல் Relateted News