கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராசிபுரத்தில் 167 துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை எம்பி ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார். 74 நிரந்தர மற்றும் 93 ஒப்பந்த தொழிலாளர்கள் அடங்கிய முகாமில், தொழிலாளர்களுக்கு உயர்தர மருத்துவ பரிசோதனை, ஸ்கேன், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ராசிபுரம் பேரூராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர செயலாளர் சங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் விநாயக மூர்த்தி, நகராட்சி கமிஷனர் (பொ) சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், டாக்டர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாம் ராசிபுரத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
0 Comments