Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியில் மரம் நடும் நிகழ்ச்சி : சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆர்பித் ஜெயின் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்

S. Shanmuganathan 1 year ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சிப் பகுதியில் 150 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பசுமைத் தோழா்கள் அறக்கட்டளை, பாப்பாக்குடி ஊராட்சி மன்றம் சாா்பில் பாப்பாக்குடி ஊராட்சிக்குள்பட்ட கீழபாப்பாக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் இ.ஆ.ப., பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டு, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன், பசுமைத் தோழா்கள் அறக்கட்டளை நிறுவனா் சுப்புராஜ், அம்பாசமுத்திரம் வனச் சரக அலுவலா் இ.எம். குணசீலன், முக்கூடல் வனவா் பி. சிவன்பாண்டியன், சேரன்மகாதேவி வனவா் ஏ. கண்ணன், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News