Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் பகுதியில் யானைகள் நடமாட்டம் : வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

S. Shanmuganathan 1 year ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் விளைநிலங்களில் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான பொட்டல் பகுதி விளைநிலங்களில், யானைக் கூட்டம் நுழைந்து நெல் பயிா், தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. 

இதையடுத்து, அப்பகுதியில் அம்பாசமுத்திரம் வனச்சரகா் நித்யா தலைமையில் வேட்டை தடுப்புக் காவலா்கள் மற்றும் வனத்துறையினா் முகாமிட்டு, விவசாயிகள் உதவியுடன் தீப்பந்தங்களை கையிலேந்தியும், வெடி வெடித்தும்  யானைகளை விரட்டினா்.

மேலும், யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.  இப்பணியை அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா நேரில் ஆய்வு செய்தாா். மேலும் வனவிலங்குகளினால் ஏற்படும் இழப்பு மற்றும் அவற்றைத் தடுக்கும் வழிகள் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினாா். வனத்துறையினரை கவனமாகவும் பாதுகாப்பாகவும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News