Loading . . .




திருநெல்வேலியில் தேசிய பசுமை படை சூழலியல் போட்டிகள்

S. Shanmuganathan 11 months ago திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, இந்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தேசிய பசுமை படை சாா்பில் மாவட்ட அளவிலான சூழலியல் போட்டிகள், பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதாா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

உதவி வனப் பாதுகாவலா் இளங்கோ தலைமை வகித்தாா். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வின் சாமுவேல் வரவேற்றாா். பள்ளி முதல்வா் ஜான்சன், சங்கா் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் கோ. கணபதி சுப்பிரமணியன், வனச்சரகா் பால்பாண்டி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, நீா் நிலைகளை பாதுகாத்தல் ஆகிய தலைப்புகளில் கட்டுரை, ஓவியம், விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு  ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் சிறைத்துறை கண்காணிப்பாளா் செந்தாமரைக்கண்ணன் வழங்கி பாராட்டினாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News