நாமக்கல் மாவட்டத்தில் ரூ.19.50 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
The Forecast 1 year ago நாமக்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ரூ.19.50 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர்.மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், வி.எஸ். மாதேஸ்வரன், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. பொன்னுசாமி, பி. இராமலிங்கம், இ.ஆர், ஈஸ்வரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments