பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Janani G 6 months ago அறிவியல்
விண்வெளி ஆராய்ச்சி பணிக்காக விண்வெளி சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கினார்.
புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா, இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்த வெற்றி கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளை ஊக்குவிப்பதாகவும், இது ககன்யான் திட்டத்திற்கு முன்மொழியும் முக்கியமான படியாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங், இது இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கியமான தருணம் என்றும் கூறி சுக்லாவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய விண்வெளி கனவுக்கு இது ஒரு பெரும் முன்னேற்றம் என்றே சொல்லலாம்.
0 Comments