இரான்–இஸ்ரேல் பதற்றம் அதிகரிப்பு: ஏவுகணை தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதலில் பலர் காயம்
Janani G 4 months ago உலக செய்திகள்
இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) பதவி ஏற்றதைத் தொடர்ந்து, இரான் திங்கட்கிழமை இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையில், ஹெஸ்பொல்லா அமைப்பு புதிய தலைவருக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது. துருக்கி தெரிவித்ததாவது, நேட்டோ பாதுகாப்பு அமைப்புகள் தென்கிழக்கு வான்வெளியில் நுழைந்த இரண்டாவது ஈரான் ஏவுகணையை தடுத்துவிட்டதாகும்.
மேலும், பஹ்ரைன் நாட்டின்(Sitra) சித்ரா பகுதியில் நடந்த ஈரான் ட்ரோன் தாக்குதலில் 32 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் குழந்தைகள் உட்பட நால்வர் தீவிர நிலையில் உள்ளனர்.
தாக்குதல்கள் தொடரும் வரை தற்காலிக அமைதி ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும், தற்காப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் இரான் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலைமை தொடர்ந்து கவனிக்கப்படும் நிலையில் உள்ளது.
0 Comments