பிரான்ஸ் அதிபர் எமானுவல் மக்ரோன், மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் ரஷ்யாவுக்கு அழுத்தம் குறைய காரணமாகாது என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதை கூறினார். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்தாலும், ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நடவடிக்கைகளை மாற்றக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
ஏழு முன்னணி நாடுகள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், எண்ணெய் விலை உயர்வு எந்த நிலையிலும் ரஷ்யா மீதான தடைகளை தளர்த்த காரணமாக இருக்கக்கூடாது என்றும் மீண்டும் உறுதி செய்யப்பட்டதாகவும் மக்ரோன் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இருப்பினும் அமெரிக்கா எடுத்துள்ள தற்காலிக முடிவு முழுமையான மாற்றமாகாது என்றும் அவர் கூறினார்.
பிரான்ஸ் தற்போது எந்த நாட்டுடனும் போரில் இல்லை என்றும், தனது நிலை பாதுகாப்பு நோக்கத்திலேயே இருப்பதாகவும் மக்ரோன் தெளிவுபடுத்தினார்.
0 Comments