Loading . . .




இரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்: உலகளவில் கவலை அதிகரிப்பு

Janani G 3 months ago உலக செய்திகள்

இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் மூன்றாவது வாரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. வளைகுடா பகுதிகளில் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

குவைத் நாட்டின் மினா அல் அக்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்தது. பல வளைகுடா நாடுகள், இரான் தொடர்பான தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பிரீமியம் பெட்ரோல் வகைகளுக்கு மட்டுமே லிட்டருக்கு ₹2 முதல் ₹3 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் அதிகாரிகள் கூறினர்.

எல்.பி.ஜி உற்பத்தி 40 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், தேவைக்கேற்ப இறக்குமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பதற்றம் நீடித்தாலும், அவசிய தேவைகள் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் தொடர்கின்றன.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News