சர்வதேச பயங்கரவாதி அப்துல் ரகுமான் மக்கி - ஐ.நா. முடிவுக்கு இந்தியா வரவேற்பு
The Forecast 3 years ago உலக செய்திகள்
சர்வதேச பயங்கரவாதி அப்துல் ரகுமான் மக்கி - ஐ.நா. முடிவுக்கு இந்தியா வரவேற்பு
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார். அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதற்கிடையே, அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. இந்நிலையில், அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு வெளியிட்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
0 Comments