பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு” -
The Forecast 3 years ago விருதுநகர்
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு” - விருதுநகரில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி., எம்,எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை வகித்தார். கண்காணிப்புக் குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மத்திய மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
0 Comments