இந்திய குடியரசு துணைத் தலைவர் தமிழ்நாட்டிற்கு வருகை - முன்னேற்பாடு குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் (22.02.2023) தலைமைச் செயலகத்தில், இந்திய குடியரசு துணைத் தலைவர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதால் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில், இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, இ.ஆ.ப., பொதுத் துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப, பொதுத் துறை அரசு துணை செயலாளர் டாக்டர் எஸ்.அனு, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இராணுவம், கப்பற்படை, காவல் துறை மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments