பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய தூதரகங்களுக்கு வெளியே போராட்டங்கள் நடத்தப்பட்டன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழக வளாகத்தில், மகாத்மா காந்தியின் சிலை உள்ளது. இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தினர். கனேடிய தூதரை தொடர்பு கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனில் உள்ள 6 அடி உயர மகாத்மா காந்தியின் சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தினர். அதன் கீழ் நமது நாட்டிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷங்களை எழுதினர்.
0 Comments