கர்நாடகா மாநில தேர்தல் தொடர்பாக காணொலி கூட்டம்- தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் தலைமையில், தலைமைச் செயலாளர் முனைவர் வே. இறையன்பு இ.ஆ.ப. பங்கேற்பு
The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்வதற்காக. (01.05.2023) புதுதில்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார் அவர்கள் தலைமையில், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம், ஒழுங்கு), காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (செயலாக்கம்), காவல் துறை ஒருங்கிணைப்பு அலுவலர் (பொது), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments