Loading . . .




ஒரே நேரத்தில் அனைத்துப் பல்கலை. தேர்வு முடிவுகள்: அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

The Forecast 2 years ago உயர் கல்வித்துறை

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வேறு கல்லூரியில், விருப்பமான வேறொரு படிப்பு கிடைத்தால் கல்லூரி மாற விரும்புவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரியின் நிர்வாகம், இடம் மாறிச்செல்லும் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதில்லை; சான்றிதழ்களை தருவதில்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் துணைவேந்தர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் சேர்ந்த கல்லூரி தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி அல்லது அரசு கல்லூரியாக இருந்தாலும் சரி, மாணவர்கள் விரும்பி வேறு கல்லூரிக்குச் செல்லும்போது அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பிக்கொடுத்து விட வேண்டும்.

மாற்றுச்சான்றிதழ் (டிசி) உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் உடனடியாக அவர்களிடம் வழங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு துணைவேந்தர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் உடனடியாக இதுதொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று துணைவேந்தர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பாடத் திட்டம்: அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும்

பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டது. அதற்கேற்ப, மாநில உயர்கல்வி கவுன்சில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. இந்த பாடத்திட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்கள் 100 சதவீதமும், இதர பாடங்கள் 75 சதவீதமும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். கல்லூரிகளில் முதல் 4 பருவத்திலும் தமிழ் பாடம் இடம்பெறும்.

ஒரே நாளில் தேர்வு முடிவு: தற்போது பல்கலைக்கழகங்களில் தேர்வு முடிவுகள் வெவ்வேறு நாள்களில் வெளியிடப்பட்டு

வருகின்றன. இதனால் ஒரு

பல்கலைக்கழக மாணவர்கள் இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேருவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதை கருத்தில்கொண்டு இனி

வரும் காலங்களில் அனைத்து தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எந்தெந்த பல்கலைக்கழகங்களில் என்னென்ன

நேரத்தில் பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளை வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பல்கலைக்கழகங்களில் முதுநிலை

படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெவ்வேறு நாள்களில் நடைபெறுகிறது. இனிமேல் இளநிலை படிப்புகளுக்கான

முதுநிலைஏஈ படிப்புகள் வழங்கப்படுகின்றன என்பது மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு முதுநிலை படிப்புகளுக்கு பொறியியல், மருத்துவ படிப்புகளைப் போன்று ஒரே விண்ணப்பம் பெறப்படும் என்றார் அவர்.

0 Comments

Post your comment here

உயர் கல்வித்துறை Relateted News