சிறுபான்மையினர் நலத்துறையில் அரசு நிதி உதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு - தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப
The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தலைமைச் செயலகத்தில், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் தன்யகுமார் ஜினப்பா குண்டே அவர்கள்,தலைமைச் செயலாளர் ஆகியோர், சிறுபான்மையினர் நலத்துறையில் அரசு நிதி உதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஹனீஷ் சாப்ரா, இ.ஆ.ப., சிறுபான்மையினர் இயக்குநர் முனைவர் சீ.சுரேஷ் குமார், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.அமிர்தஜோதி, இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப. மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments