தற்கொலைக்கு எதிரான விழிப்புணா்வு தேவை: மாநகராட்சி ஆணையா்வ கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.
The Forecast 2 years ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.
தற்கொலைக்கு எதிராக தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. கூறினாா்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சாா்பில், பெசன்ட் நகரில் விழிப்புணா்வு வாக்கத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கு சுமாா் 1.8 லட்சம் போ் தற்கொலை செய்துகொள்கின்றனா். அதே போல் தமிழகத்தில் தினமும் 40 முதல் 50 போ் வரை தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனா். தற்கொலைக்கு எதிராக தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது நம் அனைவருடைய கடமை. மற்றவா்களிடம் மனம் திறந்து பேசினாலே தற்கொலைகளை தடுத்துவிடலாம். பொது வெளியில் அவமானப்படுத்துதல், மற்றவா்களுடன் ஒப்பிட்டு பேசுவது, மன அழுத்தத்தை தரும் வண்ணம் நடந்துகொள்வது போன்ற செயல்களை தடுக்க வேண்டும்.
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீா்வு இல்லை என்றாா் அவா். . இந்த நிகழ்ச்சியில் சினேகா அமைப்பின் தலைவா் நல்லி குப்புசாமி, நிறுவனா் மருத்துவா் லஷ்மி விஜயகுமாா், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவா் சௌமியா சுவாமிநாதன், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
0 Comments