ஒட்டு கேட்பு விவகாரம் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் .
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்டது குறித்து விளக்கம் கேட்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிறுவனம் காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், பவன் கெரா, கே.சி. வேணுகோபால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ்சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் சில காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் உதவியாளர்கள். இது குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான சிஇஆர்டி, ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிஇஆர் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகச் செயலர் தெரிவித்தார்.
0 Comments