இந்தியாவின் தலைமை தகவல் ஆணையரான ஹீரலால் சமாரியா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நவம்பர் 6ஆம் தேதி பதவியேற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த சமாரியா, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையில் இணைச் செயலாளராகவும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக பதவியேற்ற முதல் தலித் நபர் இவர்தான். ஒய்.கே.சின்ஹாவின் பதவிக்காலம் அக்டோபர் 3-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து அந்த பதவி ஒரு மாதம் காலியாக இருந்தது.
0 Comments