Loading . . .




சட்டமன்ற தேர்தல்: சத்தீஸ்கரில் 59%, மிசோரத்தில் 68% வாக்குகள் பதிவு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் நக்சல் தாக்குதல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மிசோரமில் மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.  சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.  சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  60,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அவர்களில் 40,000 பேர் CRPF வீரர்கள்.  நக்சல் அச்சுறுத்தல் காரணமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  5 மாநில தேர்தல்கள் நிறைவடைந்ததையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படும்.

அதேபோல் மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் 18 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மியான்மர் மற்றும் வங்கதே சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை ஒட்டி மிசோரமின் சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.


மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். ஆனால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர் வெளியே வந்தார். மேற்கண்ட தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது, 5 மாநில தேர்தல்கள் முடிந்த பின்னர் வரும் டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News