டெல்லியின் காற்றின் தர நிலையில் முன்னேற்றம் ஒற்றை இலக்க திட்டம் தள்ளிவைப்பு: டெல்லி அரசு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் ஒற்றைப்படை-இரட்டை இலக்கத் திட்டத்தை அமல்படுத்துவதை டெல்லி மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. தற்போது காற்றின் தரம் 408 டிகிரியாக உள்ள நிலையில், பரவலாக மழை பெய்து வருவதால் நகரின் காற்று மாசு குறியீடு சற்று குறைந்துள்ளது. கடுமையான காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் நவம்பர் 13 முதல் 20ஆம் தேதி வரை வாகனங்களுக்கு ஒற்றை இரட்டை இலக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தில்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்தார். இத்திட்டம் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் டாக்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தனியாருக்குச் சொந்தமான வாகனங்களை அவற்றின் பதிவு எண்களின் அடிப்படையில் ஒற்றை இரட்டை இலக்க அமைப்பில் வகைப்படுத்துகிறது, குறிப்பிட்ட நாட்களில் ஒற்றை இலக்க வாகனங்கள் மற்றும் குறிப்பிட்ட நாட்களில் இரட்டை இலக்க வாகனங்களை இயக்க அனுமதிக்கிறது. வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 2016ஆம் ஆண்டு ஒற்றை-இரட்டைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
0 Comments