திருமண பந்தத்தை மீறிய உறவு குற்றம் அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
திருமண பந்தத்தை மீறிய உறவு குற்றம் அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை
திருமண பந்தத்தை மீறி மற்றொருவரின் மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமாக கருதப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497, கேரளாவைச் சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக 2018 இல் ரத்து செய்யப்பட்டது. நீதிக்கு புறம்பான உறவுகள் குற்றங்கள் அல்ல என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நகரீக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சக் ஷீயா 2023 ஆகிய மூன்று புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். புதிய மசோதாக்களை பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்து, அதன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்து, திருமண பந்தத்தை மீறும் உறவுகளை குற்றமாக கருதும் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஆண், பெண் பாகுபாடின்றி தண்டனை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது..
0 Comments