Loading . . .




பாட புத்தகங்களில் ‘இந்தியாவிற்கு பதில் பாரதம் ’ என்சிஇஆா்டி பரிந்துரை...

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதன் பள்ளி பாடத்திட்டத்தை தேசிய கல்வி கொள்கை 2020ன் அடிப்படையில் திருத்துகிறது. சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சேர்த்து வகுப்பறைகளில் அரசியலமைப்பின் முன்னுரையை எழுத குழு பரிந்துரைக்கிறது.  என்சிஇஆர்டியின் உயர்மட்டக் குழுக்களில் உள்ள பாட நிபுணர்களை இணைத்து, அடுத்த கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் செயல்படுத்தப்படும்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) உயர்மட்டக் குழு, இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பள்ளி சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வகுப்பறைகளில் எழுதப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளி பாடத்திட்டத்தை NCERT திருத்துகிறது. இதற்காக, NCERT அந்தந்த பாட நிபுணர்களைக் கொண்ட குழுக்களை அமைத்துள்ளது. பள்ளி பாடப் புத்தகங்களில் நாட்டின் பெயா் இந்தியா என்பதை ‘பாரதம்’ என பெயா் மாற்றம் செய்யவும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப்புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News