விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள்: உச்சநீதிமன்றம் விமர்சனம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பயிர்க் கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை என்பதால், ஏழை விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
0 Comments