புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் முதல் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பைனாலேவை (IAADB) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்த விழாவில் ஆத்மநிர்பர் பாரத் வடிவமைப்பு மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும் ஏழு ஆய்வு வெளியீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய மோடி, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியமும், பன்முகத்தன்மையும் நமது நாட்டின் துடிப்பான ஜனநாயகத்தால் உருவானது என்றார். சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி, நூலகங்களின் திருவிழா போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம், உலகளாவிய கலாச்சார முயற்சிகளை நிறுவனமயமாக்க இந்தியா முயற்சிக்கிறது என்று மோடி கூறினார். இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது என்றார். கேதார்நாத் மற்றும் காசி போன்ற கலாச்சார மையங்களின் வளர்ச்சியாக இருந்தாலும் கலை மற்றும் கட்டிடக்கலையின் ஒவ்வொரு துறையிலும் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். சுதந்திரத்தின் பொற்காலத்தில், கலாச்சார செழுமையின் புதிய பரிமாணங்களை இந்தியா உருவாக்கி வருகிறது என்றார்.
0 Comments