மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா ஆறுகள் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின்கீழ் தவுதான் அணை கட்டப்படும். அங்கிருந்து இரு ஆறுகளுக்கு இடையே 221 கி.மீ. தூரத்துக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மத்திய பிரதேசத்தின் 10 மாவட்டங்களை சேர்ந்த 44 லட்சம் பேருக்கும், உத்தர பிரதேசத்தின் 21 லட்சம் பேருக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இதுதவிர, சுமார் 2 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 8.11 ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசன வசதியை பெறும். இதன்மூலம் 7.18 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடையும். மேலும் நீர்மின்சக்தி திட்டம் மூலம் 103 மெகாவாட் மின்சாரத்தையும், சூரிய மின்சக்தி திட்டம் மூலம் 27 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்யும். இதுதவிர, மத்திய பிரதேசத்தின் கந்த்வா நகரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
0 Comments