Loading . . .




நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து நான்கு விளையாட்டு வீரர்கள் பெற்றுக்கொண்டனர்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில், நான்கு பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் கோட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், கடந்த 2023ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், கடந்த 2021 மற்றும் 2024 ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் ஹர்மன்பிரீத் சிங், உயரம் தாண்டுதலில் பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர், குடியரசுத் தலைவரிடம் இருந்து மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினைப் பெற்றனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News