இந்திய விமானப்படையின் சக்தியை மேலும் உயர்த்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6 தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் மார்ச் 2026க்குள் சேர்க்கப்பட உள்ளன. பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் இந்த விமானங்கள் தயாராகி வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், அமெரிக்காவின் GE ஏரோஸ்பேஸில் இருந்து கிடைக்கின்றன. இயந்திரங்கள் வந்தவுடன், அனைத்து விமானங்களும் இறுதிக் கட்ட அமைப்பில் சேர்க்கப்பட்டு, இந்திய விமானப்படையில் சேவைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கி முன்னேறும் இந்தியாவின் முயற்சிக்கு இது முக்கியமான ஒரு முன்னேற்றமாகும்.
0 Comments