நேபாளத்தில் அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், நேபாளத்தின் மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள குல்மன் கிசிங் இடைக்கால பிரதமராக தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் Social Media தடைக்கு எதிராக Gen-Z தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் வெடித்தது.
இதன் விளைவாக, பிரதமர் சர்மா ஒலி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல் இருவரும் பதவி விலகினர். தொடர்ந்து, நிலைமைக்கு தீர்வு காண இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கிசிங் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். நேபாளத்தின் அரசியல் நிலைமை எவ்வாறு முன்னேறும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
0 Comments