Loading . . .




அமெரிக்கா மீது ஈரான் கடும் குற்றச்சாட்டு

Janani G 1 month ago தேசிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் படை நடவடிக்கையை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். இந்த மோதல் குறித்து அவர் வெளியிட்ட கருத்தில், கடைசி தோட்டாவும் கடைசி வீரரும் களத்தில் இருக்கும் வரை போராடுவோம் என்ற உறுதியை தெரிவித்தார்.

மேலும், IRIS தேனா என்ற கப்பல் இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்ததாகவும், அதில் எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிராயுதபாணிகள் இருந்ததாகவும் அவர் கூறினார். இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கா அந்தக் கப்பலை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச அளவில் கவனம் அதிகரித்து வரும் நிலையில், நிலைமை மேலும் பதற்றமடையாமல் அமைதியான தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே உருவாகியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News