இடுக்கி மாவட்டம் முன்னார் அருகிலுள்ள சோக்கிரமுடி மலைப்பகுதியில் அரசு நடவடிக்கைக்குப் பிறகு நீலகிரி தார் இனங்கள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக இந்த பகுதி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கான மையமாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை மாற்றம் கண்டுள்ளது. தற்போது இந்த மலைப்பகுதி நீலகிரி தார் மற்றும் நீலகுறிஞ்சி செடிகளுக்கு ஏற்ற இயற்கை வாழ்விடமாக மாறியுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் அடிமாலி பகுதியை சேர்ந்த ஒருவர் 14.69 ஏக்கர் நிலத்தை வாங்கி அதை 60க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரித்து விற்க முயன்றார். இதற்காக சட்டவிரோத சாலை அமைத்ததும், மரங்கள் வெட்டப்பட்டதும், ஒரு சிறிய அணை கட்டப்பட்டதும் உள்ளூர் மக்களிடையே கவலை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக பைசன் வாலி பகுதி மக்கள் இணைந்து சோக்கிரமுடி பாதுகாப்பு குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தினர். பின்னர் அரசு தலையீட்டில் அந்த நிலம் மீட்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக இயற்கை வளங்கள் மீண்டு, விலங்குகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகியுள்ளது.
0 Comments