தமிழ்நாடு முதல்வர் விஜய், தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
வரவிருக்கும் மாநில வரவு–செலவுத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய சுற்றுலாத்துறை தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்திற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக கேரவன் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாநிலத்தின் முக்கிய மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா மையங்களை புதிய முறையில் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, சுற்றுலா தளங்களை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுவது மற்றும் நீடித்த சுற்றுலா வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பான திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி சுற்றுலா மாநிலங்களில் ஒன்றாக மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
0 Comments