Loading . . .




வங்கிகளில் ரூ.2,000 நோட்டு மாற்றம் செய்யும் பணி தொடக்கம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் நேற்று முதல் (23-ம் தேதி) வரும் செப். 30-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கு வசதியாக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

குறிப்பாக, ரூ.2,000 நோட்டுகள் அதிகளவு வரும்பட்சத்தில் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து வங்கிகளிலும் தேவையான அளவுக்கு ரூ.200, ரூ.500 நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. அத்துடன், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், பெரும்பாலான வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சில வங்கிகளில் தனி வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன், பொதுமக்கள் வங்கியில் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News