Loading . . .




ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்த ஆதரவாளர்கள்- முடிவை மாற்றிய மணிப்பூர் முதல்வர்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை அவர் திரும்பிப் பெற்றுக் கொண்டார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News