1988ம் ஆண்டு அரியானா பிரிவு ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் யாதவாவை ரயில்வே பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநரக தலைவராக நியமித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கடலோர காவல்படையின் 25வது இயக்குனராக மூத்த அதிகாரி ராகேஷ் பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.1989ம் ஆண்டு அதிகாரியான இவர் கொச்சி கடற்படையில் பயிற்சி பெற்றவர். ஒன்றிய அரசின் உளவுத் துறை(ஐ.பி) சிறப்பு இயக்குநர் ஷாபி அஹ்சன் ரிஸ்வி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறையின் இணை இயக்குநராக ராஜேஷ் பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments