செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தலசீமியா, ரத்தசோகை உள்ளவர்கள் இதை உண்ணக்கூடாது என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் மக்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நீதிமன்றம் இந்த மனுவை ஒத்தி வைத்துள்ளது.
0 Comments