Loading . . .




மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது: மம்தா பானர்ஜி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் குழப்பத்தை

ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக

அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி

குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக

மக்களை பிளவுப்படுத்தி மாநிலத்தின்

நிலை மோசமாக இருப்பது போல

காட்டுவதற்காக பாஜக முயற்சி

செய்கிறது என தெரிவித்த அவர்,

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள

நாடாளுமன்ற தேர்தலை

மையப்படுத்தியே பாஜக இவ்வாறு

திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க: உஜ்ஜீவன் ஸ்மால்

பைனான்ஸ் வங்கியின் லாபம் 60

சதவீதம் உயர்வு!

இது தொடர்பாக அவர்

சட்டப்பேரவையில் பேசியதாவது:

தில்லியில் அண்மையில் நடைபெற்ற

மூத்த தலைவர்களுடனான

சந்திப்புக்குப் பிறகு பாஜக திட்டம்

ஒன்றை தீட்டியுள்ளது. திரிணமூல்

காங்கிரஸின் வாக்கினைப் பிரிக்கும்

திறன் படைத்த கட்சிக்கு நிதியுதவி

அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் சந்திப்பு

நடைபெற்றுள்ளது. அந்த சந்திப்பில்

இடம் பெற்றவர்களின் நான் கூற

மாட்டேன். அவர்கள் சமுதாயத்தை

ஜாதி மற்றும் மதம் அடிப்படையில்

பிளவுப்படுத்த நினைக்கிறார்கள்.

அவர்கள் பெண்கள் மற்றும்

பட்டியலின மக்களுக்கு எதிரான

குற்றங்களை பெரிதுப்படுத்தி

மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு

மோசமாக இருப்பதாக காட்ட

நினைக்கிறார்கள் என்றார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News