Loading . . .




நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்சி பாஜக: மம்தா பேச்சு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்சி பாஜக என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.Bமேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதிக்கு 3 நாள் நிர்வாகரீதியிலான பயணம் மேற்கொண்டுள்ள அவர்,அங்குள்ள காந்தி சிலைக் குமரியாதை செலுத்தி பேசியதாவது: மணிப்பூரில் பழங்குடியின மக்கள் பெரும் துயரைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் பிரச்னைகளுக்கு யாரும் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. தலித்துகள் பல்வேறு பிரச்னைகளை

எதிர்கொண்டு வருகின்றனர். இதில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பாஜகவை தில்லியில் (மத்திய ஆட்சியில்) இருந்து வெளியேற்ற 'வெள்ளையனே வெளியேறு' தினத்தில் நாம் உறுதியேற்க வேண்டும். இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்சி பாஜக. மத்திய அரசு அரசியல்

காரணங்களுக்காக தொடர்ந்து மேற்கு வங்க நலன்களைப் புறக்கணித்து வருகிறது.

மாநிலத்துக்கு உரிய நிதியையும் விடுவிப்பதில்லை. மத்திய அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடர்ந்து போராடும்.

மாநில விவகாரங்களில் ஆளுநர் மாளிகை தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. ஆளுநர் பதவிக்கு என சில வரம்புகள் உள்ளன. மாநிலத்தில் கல்வியாளராக இல்லாத சிலரை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நியமித்துள்ளார்' என்றார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News