மூன்றாம் கட்ட இ-கோர்ட் திட்டத்துக்கு ரூ.7,210 கோடி செலவாகும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
7,210 கோடி செலவில் 3வது கட்ட இ-கோர்ட் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்ரூ.7,210 கோடி செலவில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இ-கோர்ட் திட்டத்தின் 3-வது கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: அடுத்த 4 ஆண்டுகளுக்கு 3வது கட்ட இ-கோர்ட் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்த தேசிய மின் ஆளுமை திட்டத்தின் ஒரு பகுதியாக 2007ல் இ-கோர்ட்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் 2வது கட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, கட்டம் 1 மற்றும் 2 இன் ஆதாயங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, கட்டம் 3 திட்டம் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.7,210 கோடி செலவில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
அதன்படி, மின்னணு, ஆன்லைன் மற்றும் காகிதமில்லா நீதிமன்றங்கள் மூலம் காகித பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டு, முழு நீதிமன்ற பதிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொழில் நுட்பத்தில் அறிந்திடாத மக்களுக்காக இ-சேவை மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் டிஜிட்டல் பிளவு குறையும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தவிர, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகளை வழங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில், காஸ் சிலிண்டர் விலையில் ரூ.200 குறைப்பு அறிவித்த பிரதமர் மோடி, உஜ்வாலா திட்டத்தில் புதிதாக 75 லட்சம் குடும்பங்கள் இணைக்கப்படும் என அறிவித்தார். மேலும், சைப்ரஸில் உள்ள M/s Perhyanda's Suven Pharmaceutical Manufacturing Company இல் ரூ.9589 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீட்டுக்கான பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
0 Comments