Loading . . .




காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தனர். அப்போது 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது. மழை பற்றாக்குறை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம், அதற்காக இருக்கும் நீரைக்கூட தர மறுத்தால் எப்படி? என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து காவரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடியே தண்ணீர் திறக்கப்பட்டுவதாகவும் தமிழ்நாட்டிற்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்று கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்; குறைவான மழை பெய்யும் காலங்களில் சுப்ரீம் கோர்ட் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. இறுதியில், காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறுவது தவறு என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News