ரூ.12,000 கோடிக்கு ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் ரூ.2,000நோட்டுகளை செப்டம்பர் 30-ம்தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த மே மாதம் 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்பின், ஒரு வாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கிஆளுநர் சக்திகாந்த தாஸ்கடந்த கூறியதாவது:
இதுவரை 87% ரூ.2,000 நோட்டுகள் (ரூ.3.43 லட்சம் கோடி) திரும்பி வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி ரூ.12,000 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அக்டோபர் 8-ம் தேதி (நேற்று) முதல் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம்.
0 Comments