Loading . . .




மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேதனை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் வேதனையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து வலுப்பெற்றுள்ள புயல், மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று நெல்லை - மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  விமான நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.  வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.  சென்னையில் 162 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, கழிவுகள் நிறைந்த சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை   பார்வையிட்டார்.  புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், மிஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News