அரசு சிறு நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது : பிரதமர் மோடி
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ் கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் விக் ஷித் பாரத்சங்கல்ப் யாத்ரா யாத்திரை தொடங்கி வைப்பது தாமதமானது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் வளர்ந்த இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்ட பயனாளிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:
மோடியின் உத்திரவாத வாகனம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற சபதத்துடன், சென்று கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் வளர்ந்த இந்தியா சபத யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு சென்றடைந்துள்ளது. குடும்ப உறுப்பினர் போல், அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சமுதாயத்தில் உள்ள பல பிரிவினருக்கும் நமது அரசு உதவியுள்ளது. அனைவரின் நம்பிக்கையும் முடிவடைந்த பிறகு மோடியின் உத்திரவாதம் தொடங்குகிறது.
சுதந்திரத்துக்குபின் நீண்ட காலமாக வளர்ச்சியின் பயன்கள் சில பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்தன. ஆனால், எனது அரசு சிறு நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அதுதான்வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும். மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை அனைவரும் பெற வேண்டும். வளர்ந்த இந்தியா சபத யாத்திரை நான் தொடங்கி வைத்தாலும், இன்று அந்த யாத்திரையை நாட்டு மக்கள்தான் வழிநடத்துகிறார்கள். இந்த யாத்திரை முடியும் இடத்தில், அங்குள்ள மக்கள் தங்கள் யாத்திரையை தொடங்குகின்றனர். நாட்டில் தற்சார்பு பெண்கள், தங்களை மட்டும் காத்துக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் வரமாக இருக்கின்றனர். அதுபோல் கடினமாக உழைக்கும் மக்களுக்கும், எனது அரசு அயராது உழைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments