இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் (I.N.D.I.A.) கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இக்கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்று தங்கள் எண்ணங்களை முன் வைத்தன. மேலும் கூட்டணி எப்படி முன்னேற வேண்டும் என்பது குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்றார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியதாக அவர் கூறினார்.
0 Comments