கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை-புற்றுநோய் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவின் போது ஒரு வீடியோ செய்தியில், எந்தவொரு நாடும் வளர்ச்சியடைய வேண்டுமானால், மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவை கொண்டு வந்துள்ளதாக மோடி கூறினார். இத்திட்டத்தின் மூலம் இன்று 6 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் குஜராத் அரசின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், கடந்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் குஜராத் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மாநிலம் இந்தியாவின் பெரிய மருத்துவ மையமாக மாறி வருவதாகவும் கூறினார். 2002 வரை, குஜராத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன, இன்று எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது, என கூறி பெருமிதம் கொண்டார்.
0 Comments