அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர்.
இதில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக அமைச்சரவையில் பெண் ஒருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments