வடசென்னை அனல் மின் நிலையம் நிலை மூன்றில் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,, நேரில் ஆய்வு
The Forecast 1 year ago தமிழ்நாடு
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ல் ஏற்பட்ட சிறுசிறு தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு.ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-2-ன் தலைமைப் பொறியாளர் என்.பி.சண்முகசேதுபதி, வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-3-ன் தலைமைப் பொறியாளர் (மு.கூ.பொ) பி.டி.மணிவர்மன், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் யு.வள்ளியம்மை, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய பாரத மிகு மின் நிறுவன பொது மேலாளர் எஸ்.கே.மண்டல் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 Comments