டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாதிமிர் புதின், ஈரான் தொடர்பான நிலைமை குறித்து 90 நிமிடங்கள் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இந்த உரையாடலில், போர் மீண்டும் தீவிரமடைந்தால் உலகளவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என புதின் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணும் நோக்கில் நடைபெறும் ராஜதந்திர முயற்சிகளுக்கு ரஷ்யா முழுமையான ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் தற்போதைய நிலவரங்களை பகிர்ந்து கொண்டதாக கிரெம்ளின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச கவனம் ஈரானைச் சுற்றியுள்ள பதற்ற நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
உலகளாவிய சிக்கல்களுக்கு உரையாடல் மூலம் தீர்வு காணும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இந்த தொடர்பு, சர்வதேச அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய கட்டமாகும்.
0 Comments