நாசா, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆய்வுடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மரணம் மற்றும் மாயம் சம்பவங்களை கூட்டாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறது.
2022 முதல் இதுவரை குறைந்தது 11 விஞ்ஞானிகள் மரணம் அடைந்ததோ அல்லது காணாமல் போனதோ பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை மற்றும் பிற அமைப்புகளும் கவனம் செலுத்துகின்றன. தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த தகவலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாசா பேச்சாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, தகவல்கள் கிடைக்கும் போது வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், அமெரிக்க கண்காணிப்பு மற்றும் அரசு சீர்திருத்தக் குழு பல அமைப்புகளிடம் தகவல் கோர உள்ளது.
மரணம் அடைந்தவர்களில் சிலர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்; சிலர் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், ஐந்து பேர் காணாமல் போனதாகவும் தகவல்.
இந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments